இந்தியாவில் நடைபெற்று வருகின்ற புரோ கபடி லீக் (Pro Kabaddi League) இல் டபாங் டெல்லி மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள்இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
இன்றைய தினம் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் டபாங் டெல்லி, பெங்களூரு புல்ஸ் அணியை 44-38 எனவும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ், யு மும்பா அணியை 37-35 எனவும் தோற்கடித்திருந்தன.
இறுதிப்போட்டி 19ம் திகதி இலங்கை நேரப்படி பிற்பகல் 7.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் புரோ கபடி லீக்கில் இரு அணிகளும் இதுவரை பட்டத்தினை கைப்பற்றியதில்லை. எனவே யார் அந்த பட்டத்தினையும் 3கோடி பணப்பரிசினையும் பெற்றுக்கொள்ளப்போகிறார்கள் என இரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.