கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு அனுமதி கோரி, ஐ.பி.எல் நிர்வாகம் கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இந்த தொடரை இந்தியாவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை குறித்த தொடரை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்திருந்த நிலையிலேயே தற்போது ஐ.பி.எல் நிர்வாகம் மேற்படி அனுமதி கடிதத்தை அனுப்பியுள்ளது.