இங்கிலாந்து-மேற்கிந்திய தீவு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பம்

download 18
download 18

இங்கிலாந்து, மேற்கிந்திய தீவு அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவு அணி, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவு அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று, தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.

இந்நிலையில், இரு அணிகள் மோதும், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.

ஏற்கனவே தொடர் 1-1 என்று சமநிலையில் உள்ளதால், இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும்.

குறிப்பாக, சொந்த மண்ணில் விளையாடுவதால் இங்கிலாந்திற்கு தொடரை வெல்ல அதிகமான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மேற்கிந்திய தீவு அணியும் முதல் டெஸ்டை போல் இந்த டெஸ்டிலும் வென்று 32 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளதால், போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.