ஜப்பானில் 9வது உலகக் கிண்ண ரக்பி போட்டிகளில் நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டிகளில் வேல்ஸ் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
பிரான்ஸ் அணியை எதிர்கொண்ட வேல்ஸ் அணி 19-20 எனும் புள்ளிகள் வித்தியாசத்திலும் ஜப்பானை எதிர்கொண்ட தென்னாபிரிக்க அணி 3-26 எனும் புள்ளிகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
எதிர்வரும் 26ம் திகதி இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையில் முதலாவது அரையிறுதி போட்டியும், வேல்ஸ் – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் 2வது அரையிறுதி போட்டியும் நடைபெறவுள்ளது.