இந்தியன் பிரிமியர் கிரிக்கட் தொடரின் போட்டி அட்டவணை இன்று அறிவிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொவிட் 19 பரவல் காரணமாக இந்த முறை ஐ.பி.எல் போட்டியை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்தது.
இதற்கமைய ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்பதற்காக அனைத்து அணிகளும் டுபாய் சென்றுள்ளன.
இந்த நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் 14 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இந்தநிலையில் ஐ.பி.எல் போட்டிக்கான அட்டவணையை இதுவரை அறிவிக்கவில்லை.
எனினும் இன்றைய தினம் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்படலாம் என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு தகவல்கள் கூறுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.