இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.
ரோமில் நேற்றைய தினம் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் நோவக் ஜோகோவிச் அர்ஜெண்டீனாவின் டியேகோ ஷ்வார்ட்ஸ்மேனை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற குறித்த இறுதிப் போட்டியில் ஜோகோவிச் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 5ஆவது முறையாகவும் சம்பியன் பட்டத்தை வென்றார்.