ராஹூல் தெவாட்டியாவுக்கு நன்றி தெரிவித்த யுவராஜ் சிங்!

raakul
raakul

ஐ.பி.எல் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில், ராஹூல் தெவாட்டியா ஒரு ஓவரில் 5 ஆறு ஓட்டங்களை பெற்று, ஒரு பந்தை தவற விட்டமைக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் நேற்று இடம்பெற்ற போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி வீரர், ராஹல் தெவாட்டியா, 18 ஆவது ஓவரில் முதல் நான்கு பந்துகளில் அடுத்தடுத்து நான்கு ஆறு ஓட்டங்களைப் பெற்றார்.

5 ஆவது பந்தை தவறவிட்ட அவர், இறுதிப் பத்திலும் ஆறு ஓட்டத்தைப் பெற்றிருந்தார்.

20 க்கு 20 கிரிக்கட் வரலாற்றில், 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில், இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற போட்டியில் ஸ்டுவர்ட் ப்ரோட்டின் பந்து ஓவரில், இந்திய அணி வீரர் யுவராஜ சிங்,5 ஆறு பந்துகளில் ஆறு 6 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்த நிலையில், நேற்றைய போட்டியில் ஒரு ஓவரில் ஆறு ஓட்டங்களைப் பெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணி வீரர் ராஹூல் தெவாட்டியா, ஒரு பந்தை தவறவிட்டிருந்தார்.

இது தொடர்பில் ட்விட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ள யுவராஜ் சிங், ஒரு பந்தை தவறவிட்டமைக்கு ராஹூல் தெவாட்டியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நேற்றைய போட்டியில் மிகச்சிறந்த வெற்றியை பெற்றமைக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கும் யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.