நடப்பு ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 13 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 48 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.
13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 13 ஆவது போட்டி அபுதாபி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று இரவு 7.30 இற்கு ஆரம்பமானது.
இந்தப் போட்டியில்கிங்ஸ் XI பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடாத்தின.
இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கிங்ஸ் XI பஞ்சாப் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த Kings XI Punjab அணி ஆட்டம் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
இதேவேளை, இந்தப் போட்டியின் சிறந்த வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த கிரண் பொலட் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில்,மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை பங்கேற்ற நான்கு போட்டிகளில் இரண்டு போட்டிகளைல் வெற்றி பெற்று இந்தியன் பிரீமியர் லீக் தரவரிசையில் தொடர்ந்தும் முதலாவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.