நடப்பு ஆண்டின் ஐ.பி.எல். ரி-20 தொடரின் 22ஆவது லீக் போட்டியில்,இன்றைய தினம் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இன்று (வியாழக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இப்போட்டியானது, டுபாய் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் ஹைதராபாத் அணிக்கு டேவிட் வோர்னரும், பஞ்சாப் அணிக்கு கே.எல். ராகுலும் தலைமை தாங்கவுள்ளனர்.
இதில் ஹைதராபாத் அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி, மூன்றில் தோல்களுடன் 4 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.
அதேபோல, பஞ்சாப் அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி, நான்கில் தோல்களுடன் 2 புள்ளிகளுடன் இறுதி இடத்தில் உள்ளது.
இரு அணிகளும் இதுவரை 14போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 10போட்டிகளில் ஹைதராபாத் அணியும், 4 போட்டிகளில் பஞ்சாப் அணியும் வெற்றிபெற்றுள்ளன.