உலகக்கிண்ண சதம் பறிபோனமைக்கு தோனியே காரணம்

gambhir
gambhir

இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீரின் சதம் பறிபோனமைக்கு எம்.எஸ்.தோனியே காரணம் என தெரிவித்துள்ளார்.

இலங்கை -இந்திய அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் கௌதம் கம்பீர் 97 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் இன்னும் 3 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்படுகின்றமையினால் முதலில் சதத்தினை பூர்த்தி செய்யுமாறு எம்.எஸ்.தோனி ஞாபகப்படுத்தியமையினாலேயே நான் ஆட்டமிழந்ததாகவும் இலக்கினை மாத்திரம் நினைத்து விளையாடியிருந்தால் தன்னால் நிச்சயம் சதத்தினை பூர்த்தி செய்திருக்க முடியுமென தற்போது தெரிவித்துள்ளார்.

தற்போது கூட, நீங்கள் ஏன் அந்த மூன்று ஓட்டங்ககளை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள் இதனால் இந்த விஷயத்தை நினைவு கூர்ந்து சொல்வது முக்கியமாக இருந்தது என கம்பீர் தெரிவித்துள்ளார்.