கொரோனா தடுப்பூசிகளுக்கு சிங்கப்பூர் சுகாதார விஞ்ஞான அதிகாரசபை அனுமதி..!

file7dk1vt8l8u01m9s4nlfe
file7dk1vt8l8u01m9s4nlfe

பைசர் மற்றும் பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசிகளுக்கு சிங்கப்பூர் சுகாதார விஞ்ஞான அதிகாரசபை அனுமதியளித்துள்ளது.

அந்த நாட்டு பிரதமர் லி ஷியன்லூங் இதனை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி இந்த மாத இறுதிக்குள் சிங்கப்பூருக்கு முதலாம் கட்ட தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கிய முதற்சில நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்றாகியுள்ளது.

ஏன்றகனவே பிரித்தானியா அமெரிக்கா பஹ்ரைன் மற்றும் கனடா போன்ற நாடுகளும் இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.