ரஷ்யாவில் முதியோர் இல்லம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் வயது முதிர்ந்த 11 பேர் உடல்கருகி உயிரிழந்துள்ளனர்.
பாஷ்கோர்டோஸ்தான் பிராந்திய இஸ்புல்டினோ கிராமத்தில் உள்ள மர கட்டிடத்தில் முதியோர் இல்லம் செயல்பட்டு வந்துள்ளது.
அங்கு அந்நாட்டு நேரப்படி திங்கட்கிழமை நள்ளிரவு 12:53 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தீப்பரவலை அதிகாலை 04.00 மணிக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வரை மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.
குறித்த தீவிபத்தில், எழுந்து நடக்க முடியாத நிலையிலிருந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
முதியோர் இல்லத்தின் ஊழியர் உள்ளிட்ட 4 பேர் உயிர்தப்பியுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.