இரண்டு ஆண்டுகளாக பாறைக்கு அடியில் வசிக்கும் நபர்

randy
randy

பிலிப்பைன்ஸில் 2 ஆண்டுகளாக ரேன்டி (Randy) என்பவர் பாறைக்கு அடியிலுள்ள சிறிய இடைவெளியில் வசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த நபரின் பெற்றோர் உயிரிழந்தபின்னர் திடீரென காணாமல் போன அவரை அப்பகுதியினர் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், பெற்றோரை பறிகொடுத்த விரக்தியிலும், பிறருடன் பேச விரும்பாததாலும் அங்குள்ள பாறைக்கு அடியில் அவர் பதுங்கி வாழ்வதை கண்டுபிடித்த சிலர் அவருக்கு உணவளித்து உதவிவருவதாகக் கூறப்படுகின்றது.

மேலும் 35 வயதான குறித்த நபரை பொது இடத்தில் வாழ வரும்படி அவர்கள் அழைப்பு விடுத்தும், அதை ஏற்க மறுத்து அங்கேயே தொடர்ந்து வசித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.