கங்காருகளுக்கு மனிதர்களுடன் உரையாடும் ஆற்றல்; ஆராய்ச்சியாளர்கள் தகவல்

kangaroo 696x463 1
kangaroo 696x463 1

புத்திக் கூர்மையுடைய விலங்கான கங்காருகளுக்கு மனிதர்களுடன் உரையாடும் ஆற்றல் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாய்களைப் போலவே அவை விழியசைவைப் புரிந்துக் கொள்வதாக கூறப்படுகிறது. காட்டு விலங்கான கங்காரூவும் வீட்டுப் பிராணியைப் போல பார்வைகள் மூலம் மனிதர்களின் குறிப்புணர்வது ஆச்சரியமளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

பொதுவாக நாய்,பூனை, குதிரை, மாடு போன்ற வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகள்தாம் மனிதர்களுடன் உரையாடும் ஆற்றல் பெற்றவை என்ற கற்பிதத்தை இந்த கண்டுபிடிப்பு தகர்த்துவிட்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.