கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் ஜோ பைடன்

joe biden
joe biden

அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிக அளவில் உள்ளன. இதற்கிடையே கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்து கண்டறியப்பட்டது அந்நாட்டு மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் பைசர் மற்றும் ஜெர்மனின் பயோன்டெக் நிறுவனம் சேர்த்து தயாரித்துள்ள, இத் தடுப்பூசி 95% செயற்படுவதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் பதவி ஏற்கவும் உள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் நியூவார்க் நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டுள்ளது.

அப்போது பேசிய அவர், மருந்து கிடைக்கும்பொழுது அதனை எடுத்துக் கொள்ளுங்கள் என நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளார்.