டுபாயில் இன்று முதல் இலவச தடுப்பூசி திட்டம் ஆரம்பம்!

download 1 17
download 1 17

அமீரகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு கடந்த மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் அபுதாபியில் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி தன்னார்வலர்களுக்கு அளிக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் நல்ல முடிவுகளை பெறப்பட்டதை அடுத்து அபுதாபி, டுபாய் உள்ளிட்ட பகுதிகள் உட்பட பல்வேறு இடங்களில் சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் அபுதாபியில் அனைத்து அரசு சுகாதார சேவைகள் துறையின் கீழ் செயற்படும் வைத்தியசாலைகள் மற்றும் குறிப்பிட்ட தனியார் வைத்தியசாலைகள் என அனைத்திலும் சினோபார்ம் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில் நேற்றைய தினம் பைசர் பயோ என் டெக் என்ற கொரோனா தடுபூசியானது டுபாயில் இலவசமாக வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் மூலம் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. இத் திட்டம் இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பமாகும் என செய்திகள் தெரிவிக்கினறன.