இத்தாலியில் பெருகும் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை!

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் , தற்போது உலகின் 210 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் இத்தாலி 8-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், இத்தாலி நாட்டில் ஒரே நாளில் 18,040 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில் அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 இலட்சத்தைக் கடந்துள்ளது.

அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 13 இலட்சத்தைக் கடந்துள்ளது.