ஈரானில் பனிச்சரிவில் சிக்கி 12 பேர் பலி

154307
154307

ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் அல்போர்ஸ் மலைத்தொடர் அமைந்துள்ளது. குறித்த மலையில் நேற்று 20 க்கும் மேற்பட்டோர் குழுவாக இணைந்து மலையேறியுள்ளனர். அதற்கு முன்னதாக இரவு நிலவிய கடுமையான பனிப்பொழிவு காரணமாக மலைத்தொடரில் பனியின் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது.

வீரர்கள் மலையேறிய போது மலையின் ஒரு பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இப் பனிச்சரிவில் மலையேறிய அனைவரும் சிக்கிக்கொண்டனர்.

அதில் மலையேறும் வீரர்களில் 12 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பனிப்பொழிவு தொடர்பான வானிலை மாற்றங்களை சரியாக கணிக்காமல் மலையோற்றத்தில் ஈடுபட்டதால் இச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.