இங்கிலாந்து நாட்டில் புதிதாக மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் தொற்றுப் பல இடங்களிலும் பரவி வருகிறது. இதில் அமீரகத்தில் வெளிநாட்டில் இருந்து வந்துள்ள ஒரு சில பயணிகளிடம் அதுபோன்ற தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் தொடர் சோதனைகள் மூலமாக மிக சிலருக்கு மட்டுமே உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். எனவே தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் தொடர்ந்து சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.