சர்வதேச ரீதியில் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தைக் கடந்துள்ளது.
கொவிட் பரவல் காரணமாக சர்வதேச ரீதியில் அமெரிக்கா அதிக பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது.
அமெரிக்காவில் 3 இலட்சத்து 97 ஆயிரத்து 385 பேர் மரணித்துள்ளார்.
பிரேசிலில் 2 இலட்சத்து 7 ஆயிரம் பேரும், இந்தியாவில் ஒரு இலட்சத்து 51 ஆயிரம் பேரும், மெக்ஸிகோவில் ஒரு இலட்சத்து 36 ஆயிரம் பேரும் மரணித்துள்ளனர்.
குறித்த நான்கு நாடுகளும் சர்வதேச ரீதியில் ஒரு இலட்சத்திற்கும் அதிகளவான கொவிட்-19 மரணங்கள் இடம்பெற்றுள்ள நாடுகளாக பதிவாகியுள்ளன.