வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர்புகைக்குண்டு பிரயோகம் செய்துள்ள நிலையில், வன்முறை எதற்கும் தீர்வாகாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
எந்தவொரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது எனவும், காயம்படுவது யாராக இருந்தாலும் பாதிப்பு தேசத்திற்குத்தான் என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.