மியான்மரில் பேஸ்புக் சேவைகளுக்கு இடைக்காலத்தடை!

Facebook 1
Facebook 1

மியன்மாரில் இணையதளத் சேவைகளுக்கு தற்காலிக தடை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, மியன்மாரில் அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு எம்.பி.டி உட்பட இணையத்தள சேவை வழங்குனர்களால், பேஸ்புக் சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சகம்,

நாட்டின் “ஸ்திரத்தன்மை” பேணுவதற்காக பெப்ரவரி 7 ஆம் திகதி வரை பேஸ்புக் தடை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது.

மேலும், நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மக்கள், போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்றும், பேஸ்புக்கைப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.