மியன்மார் இராணுவப் புரட்சியுடன் தொடர்புடைய மியன்மார் தலைவர்கள் மீது தடைகளை விதிப்பது தொடர்பிலான நிர்வாக உத்தரவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
அதன்படி, மியன்மார் இராணுவத் தலைவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய வர்த்த நடவடிக்கைகள் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மியன்மாருக்கு அமெரிக்காவினால் இதுவரை வழங்கப்பட்டு வந்த நிதி உதவியை நிறுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது