இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்

202006220903239157 Integrated In Vellore and Thiruvannamalai districts Corona SECVPF
202006220903239157 Integrated In Vellore and Thiruvannamalai districts Corona SECVPF

இந்தியாவில் வேகமாக சரிந்து வந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக இந்தியாவின் மராட்டியம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் பாதிப்புகள் பெருகி வருவதுடன் இது ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையை உயர்த்தி வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,13,08,846 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 117 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,58,306 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 15,157 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,09,53,303 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு 1,97,237 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாடுமுழுவதும் இதுவரை 2,61,64,920 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.