கல்லூரி மாணவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் கைது

kaithu 1

கல்லூரியில் கல்விகற்கும் மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பிரதேசவாசிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின்-நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள விட்டலபுரியில் நகையகம் ஒன்றை நடாத்தி வரும் நபர் ஒருவரின் மகளே இவ்வாறு கத்தியால் குத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நகையகத்தில் வேலை செய்து வந்த நபர் ஒருவர் நகையகத்தின் உரிமையாளரை காண்பதற்கு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்று சில நிமிடங்களில் உரிமையாளரின் மகளிடம் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார்.

கொடுக்கும் வேளையில் கடிதம் கீழே விழுந்துள்ளது.இவ்வாறு விழுந்த கடிதத்தை எடுக்க அந்த பெண் முயன்ற போது அவரது முதுகில் சந்தேக நபர் கத்தியால் குத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற சந்தேக நபரை பொது மக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.