அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் எத்தியோப்பியா பிரதமர்

nopal prize
nopal prize

2019-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் கடந்த அக்டோபர் 11ம் திகதி அறிவிக்கப்பட்டது. அதில் எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அலி அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

எத்தியோப்பியாவின் நான்காவது பிரதமராக 2018ல் பொறுப்பேற்ற அபி அஹமது அலி அண்டைநாடான எரித்திரியா அதிபருடன் மேற்கொண்ட சமரச நடவடிக்கைகளாலும் எத்தியோப்பியா நாட்டு மக்களின் வாழ்வாதரத்தை வளப்படுத்தவும், ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கவும் ஆற்றிய அரும்பணிக்காக அவருக்கு நோபல் விருது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 2019ம் ஆண்டு அமைதிக்கான நோபல் விருது வழங்கும் நிகழ்ச்சி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இன்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அலி அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுக்கொண்டார்.