காட்டுத்தீயினால் 2000 கோலா கரடிகள் உயிரிழப்பு

kola
kola

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் கடந்த மாதம் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 2000 கோலா கரடிகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் தீயில் கருகி நாசமாகின. சுமார் 500 வீடுகள் காட்டுத்தீயினால் முற்றிலுமாக சேதமடைந்தன. இந்த காட்டுத்தீயில் 4 பேர் பலியாகினர்.

இந்த நிலையில் காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2 ஆயிரம் கோலா கரடிகள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காட்டுத்தீ தொடர்பாக அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில் சூழலியல் நிபுணர் ஒருவர் இந்த தகவலை தெரிவித்தார்.

இது பற்றி அவர் கூறுகையில்,

“நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் எரியும் காட்டுத்தீ கோலா கரடிகளின் வாழ்விடங்களை ஏறத்தாழ முற்றிலுமாக அழித்துவிட்டது” என்று தெரிவித்தார்.