ஓமனில் ஒரேநாளில் 577 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

a0a4ab00 de2a5767 aa3f6a16 covid 19 850x460 acf cropped 850x460 acf cropped
a0a4ab00 de2a5767 aa3f6a16 covid 19 850x460 acf cropped 850x460 acf cropped

ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 577 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 135 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 327 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் ஓமனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 871 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 92.4 சதவீதமாக இருந்து வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக நேற்று மட்டும் 3 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 1,620 ஆக அதிகரித்தது.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் 88 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.