இஸ்ரேலில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாஹூ மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
பொருளாதார பின்னடைவு, கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் உள்ளிட்ட காரணிகளால் இஸ்ரேல் பிரதமருக்கு பல்வேறு அழுத்தங்கள் ஏற்பட்டிருந்தன.
இதனால், 2 ஆண்டுகளுக்குள் 4 முறை தேர்தல்கள் இடம்பெறும் சூழல் ஏற்பட்டிருந்தது.
இந்தநிலையில் 4வதாக இடம்பெற்ற தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாஹூ வெற்றி பெற்றுள்ளார்.
எவ்வாறாயினும், அவரது கட்சி பெரும்பாலான பகுதிகளில் தோல்வியடைந்துள்ளதால் ஸ்ரேலில் பல கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன