சிங்கப்பூரில் தாயை துன்புறுத்திய மகனுக்கு சிறை

117687825 andy koh
117687825 andy koh

பெற்ற தாய் என்றும் பாராமல் பட்டினிப் போட்டு, அடித்துத் துன்புறுத்திய மகனுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 56 வார சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான ஏன்டி கோ ஜு ஹுவா என்ற அந்த 30 வயது நபர், தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

தன் தாயை குளிக்கவோ, உரக்கப் பேசவோ, நல்ல ஆடைகளை அணியவோ அந்த மகன் அனுமதிக்கவில்லை என்பதும் முரட்டுத்தனமாக தன் தாயை தாக்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தேசிய பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு மேற்கொண்டபோது, தனது தாயை கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளார் ஏன்டி கோ ஜு ஹுவா.

அவருக்கு 50 வாரங்களுக்கு குறையாத சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அரசு தரப்பு வாதிட்டது.

பெற்ற தாயை மோசமாக நடத்தியதுடன் மன ரீதியிலும் வேதனைப்படுத்தி உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஏன்டி கோ ஜு ஹுவாவின் மோசமான செயல்பாடு சிங்கப்பூரர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.