கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின் தொற்றுக்குள்ளான தாதி

625.500.560.350.160.300.053.800.900.160.90
625.500.560.350.160.300.053.800.900.160.90

அவுஸ்திரேலியாவின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான பிரிஸ்பேர்னில் அமைந்துள்ள பிரின்சஸ் அலெக்ஸான்ட்ரா மருத்துவமனையில் கடமையாற்றிவரும் தாதி ஒருவர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த தாதி கொவிட் 19 தடுப்பூசி செலுத்திக்கொண்டதன் பின்னரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, இதற்கு முன்னதாக மற்றுமொரு தாதி கொவிட் 19 தொற்றுக்கு இலக்கானதோடு அவர் முதல்கட்ட தடுப்பூசியை மாத்திரமே பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தற்போது தொற்றுக்குள்ளான தாதி இருகட்ட தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.