ஸ்கொட்லாந்தில் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் தளர்வு

glasgow pa 1 720x375 1
glasgow pa 1 720x375 1

ஸ்கொட்லாந்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த தனிமைப்படுத்தல் (வீட்டில் இருத்தல்) கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது.

ஆனால், அடுத்த மூன்று வாரங்களுக்கு மக்கள் உள்ளூர் அதிகார எல்லைகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஸ்கொட்லாந்தின் டெப் சி கான் மால்கம் கிரஹாம் இதுகுறித்து கூறுகையில், ‘அத்தியாவசிய நோக்கங்களுக்காக இல்லாவிட்டால் மக்கள் உள்ளூரில் இருக்க வேண்டும்.

ஈஸ்டர் வார இறுதி பாரம்பரியமாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பார்ப்பதற்கான நேரம் என்றாலும், உள்ளூர் மற்றும் கூட்டங்களில் விதிமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

உள்ளூர் பகுதிக்குள் நீங்கள் இடங்களை பார்வையிடுகிறீர்கள் என்றால், பாதுகாப்பாக இருங்கள்’ என கூறினார்.