காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்றஉறுப்பினருமான ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.
இதனை அவர் டுவிட்டர் பக்கத்ததில் தெரிவித்து உள்ளார்.
லேசான அறிகுறி ஏற்பட்ட உடன் பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று எனக்கு இருப்பது உறுதியானது.சமீப நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும்,கொரோனா தடுப்பு வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பாக இருங்கள் என்று அதில் ராகுல் கூறி உள்ளார்.
முன்னதாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது