அனுமன் திருப்பதியில் பிறந்ததாக திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

thumb large 216 1
thumb large 216 1

அனுமன் பிறந்தது திருப்பதி திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி, ஏழுமலைகளில் ஒன்று அஞ்சணாசலம் எனப்படும் அஞ்சனாத்திரி மலை. இந்த மலையில்தான் அனுமனின் தாயான அஞ்சனை தவம் செய்தார் என்று சொல்லப்படுகிறது.

அனுமன் இந்த மலையில் தான் அவதரித்தார் என்று சொல்பவர்களும் உண்டு. இதனை உறுதிப்படுத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் 6 நிபுணர்கள் கொண்ட குழுவை நியமித்து புராணங்களை ஆய்வு செய்தது.

அந்த ஆய்வு தற்போது நிறைவடைந்துவிட்டதாகவும் அதன் முடிவாக அஞ்சனாத்திரியே அனுமனின் அவதாரத் தலம் என்று உறுதிப்படுத்த முடிவதாகவும் தெரிவித்தது.

அனுமன் திருமலையில் உள்ள ஏழு மலைகளில் ஒன்றில்தான் பிறந்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ராமநவமி நாளில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முரளிதர சர்மா தலைமையில் வெவ்வேறு துறை வல்லுநர்கள் அடங்கிய குழுவின் முடிவாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. முன்னதாக ஹம்பி பகுதியில் அனுமன் பிறந்தார் என்பதற்கு புராண தகவல்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள், கோயில் சிற்பங்கள் உள்ளிட்ட வடிவங்களில் ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான ஆதாரங்கள் கொண்ட புத்தகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.