தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க, புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2ஆவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே கடந்த 20ஆம் திகதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேலும் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று அதிகாலை 4 மணி முதல் அமுலுக்கு வந்துள்ளன. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.