தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,684 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 4,250 பேர் கொரோனா தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,097,672 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் 94 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.
இதற்கமைய தமிழகத்தில் கொரோனா தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 13,651 ஆக அதிகரித்துள்ளது