இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார நபர் துறவியாக மாறினார்!

thumb 985 1
thumb 985 1

இந்தியாவில் ஆண்டுக்கு கோடி ரூபாய் சம்பளம் சம்பளம் பெற்ற மூத்த அதிகாரி ஒருவர் அனைத்தையும் துறந்து துறவியாகியுள்ளார்.

பிரகாஷ் ஷா இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியின் வலது கரமாகத் திகழ்ந்தவர்.

இவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் திட்டப் பிரிவு துணைத் தலைவராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட உடனேயே ஆடம்பர வாழ்க்கையைத் துறந்துள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி வெள்ளை ஆடை உடுத்தி துறவிக்கான தீட்சையை பெற்ற இவருடன் மனைவி நைனா ஷாவும் துறவறம் பூண்டுள்ளார்.

ஓய்வுபெறும்போது இவரது ஆண்டு சம்பளம் இந்திய மதிப்பில் 75 கோடி ரூபாவாக இருந்துள்ளது.

கெமிக்கல் இன்ஜினீயரிங்கில் பிடெக் மற்றும் எம்டெக் பட்டம் பெற்றவர். மும்பையில் ஐஐடி பட்டம் பெற்றுள்ளார்.

இவரது இளையமகன் 7 ஆண்டுகளுக்கு முன்பே தனது 24 ஆவது வயதில் துறவியானமை குறிப்பிடத்தக்கது.