ராஜீவ் காந்தி கொலை வழக்கு; வைகோ கோரிக்கை!

vaiko 619x375 1
vaiko 619x375 1

ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஏற்கனவே திராவிட முன்னேற்ற கழகம் வலியுறுத்தி வருகின்ற நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான ஆணையை பிறப்பித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தவறு செய்யாமலே 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற ஏழு பேரில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் மரண தண்டனை கைதிகளாக மனதளவில் சித்ரவதை அனுபவித்து வருகின்றனர்.

அதுபோலவே நளினி, ரவிச்சந்திரன், ரொபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரின் இளமை வாழ்க்கையும் இருண்டு பாழாய்ப்போனது.

இந்த பிரச்சினைக் குறித்து மத்திய அரசிடம் கருத்துக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மத்திய அரசிடம் கருத்துக் கேட்டதாகவும், மத்திய அரசு அதற்கு தடை போடுவதாகவும் மோசடி நாடகத்தை இதுவரை நடத்தி வந்தனர்.

எனவே ஏழு பேரையும் விடுத்தலை செய்வதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழு பேரையும் விடுதலை செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.