நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நேபாள நாட்டின் பொகாரா பகுதியின் கிழக்கே 35 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. இத்தகவலை தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு திடீரென உருவான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.