பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 050 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 59 இலட்சத்து 17 ஆயிரத்து 397 ஆக உள்ளது.
ஒரே நாளில் 141 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 08 ஆயிரத்து 181 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 51,88,782 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 6,20,434 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.