இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு , தமது பாதுகாப்பு அமைச்சரவையை கூட்டி போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஊடக தகவல்களை மேற்கோள்காட்டி, சர்வதேச ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு இந்த அமைச்சரவைக் கூட்டத்தை அவர் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த அமைச்சரவைக் கூட்டம் தொடர்பில், பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு, இதுவரையில் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், இன்னும் ஓரிரு நாட்களுக்குள், போர்நிறுத்தத்தை எதிர்பார்ப்பதாக மூத்த பாலஸ்தீனிய கிளர்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.