கேரளாவில் இம்மாத இறுதி வரை ஊரடங்கு நீடிப்பு

020f5bbd curfew
020f5bbd curfew

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால்,  இம்மாத இறுதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

எனினும் எர்ணாகுளம், திரிச்சூர், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் விதிக்கப்பட்டிருந்த மும்மடங்கு கடுமையான ஊரடங்கு கைவிடப்பட்டு, வழமையான ஊரடங்கே நடைமுறையில்  இருக்கும் எனவும் மல்லபுரத்தில் மாத்திரம் மும்மடங்கு கடுமை நீடிக்குமெனவும் கேரள அரசு  அறிவித்துள்ளது.

கடந்த 8ஆம் திகதி முதல் நடைமுறையில் இருந்த ஊரடங்கே இம்மாத இறுதி வரை தற்போது நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 142 பேர் உயிரிழந்துள்ளடன் புதிதாக 30 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.