இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 717 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 41 இலட்சத்து 88 ஆயிரத்து 190 ஆக உள்ளது.
ஒரே நாளில் 125 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 153 ஆக உள்ளது.
மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 37.79 இலட்சத்தை கடந்துள்ளது. சுமார் 5.63 இலட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.