கேரளாவில் கனமழை; ஏழு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

CYCLONE WEATHER RAINS WIND HURRICANE 768x384 1
CYCLONE WEATHER RAINS WIND HURRICANE 768x384 1

யாஸ் புயலின் தாக்கம் காரணமாக கேரள மாநிலத்தின் ஏழு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், நாளை (புதன்கிழமை) கேரளாவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், ஆழப்புழா, பத்தினம், திட்டா, கொல்லம் ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாஸ் புயல் எதிர்வரும் 26 ஆம் திகதி கிழக்கு கடற்கரையில், ஒடிசா – மேற்கு வங்காளம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளது.