கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் 3,084 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 இலட்சத்தை கடந்துள்ளது.
இதுவரை அங்கு 9 இலட்சத்து 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அதேபோல் நேற்று ஒரே நாளில் 74 பேர் கொரோனாவுக்கு பலியானது மூலம் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 20 ஆயிரத்து 251 ஆக அதிகரித்துள்ளது.