கொவிட்-19 பரவல் அச்சுறுத்தலால் மெல்போர்ன் நகரம் முடக்கப்பட்டது!

1622123518 5493586 hirunews
1622123518 5493586 hirunews

கொவிட்-19 பரவல் அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலியால் விக்டோரியா மாநிலத்தின் தலைநகரான மெல்போர்ன் முடக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் எதிர்வரும் 7 நாட்களுக்கு அந்த நகரம் முடக்கப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மெல்போர்னில் தற்போது 26 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்துடன் 150 இடங்களில் தொற்று பரவல் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் விக்டோரியா மாநிலம், கொவிட்-19 பரவலால் அதிகளவு பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கண்டறியப்பட்டுள்ள தொற்றாளர்களால் அந்த மாநில மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்