ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 10,253 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர். அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28.86 இலட்சத்தைக் கடந்துள்ளது.
ஒரே நாளில் 184 பேர் பலியானதால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 79 ஆயிரத்து 568 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து 24.10 இலட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 3.96 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.