இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் கொரோனாவுக்கு பலி!

realistic coronavirus background 52683 35109 2
realistic coronavirus background 52683 35109 2

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளிரவெளி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

கட்டிட நிர்மாணிப்பாளராக பணிபுரிந்த 46 வயதான நபர் ஒருவர் கடந்த மாதம் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக கோவை சென்றுள்ளார். அதற்கு பின் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 9 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து குறித்த நபரின் மனைவியும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்தார்.

அத்துடன் அவரின் சகோதரர்கள் மூவருக்கும் கொரோனா தொற்றுறுதியாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் 4 மகன்களும் மருமகளும் இறந்த தகவலை அறிந்த அவர்களின் தாயும் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரே குடும்பத்தில் 5 பேர் கொரோனாவுக்கு பலியான சம்பவத்தினால் அப்பிரதேச மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.