பெல்ஜியத்தில் கொரோனா தொற்றிலிருந்து பத்து இலட்சம் பேர் மீண்டுள்ளனர்!

bel 720x375 1
bel 720x375 1

பெல்ஜியத்தில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றிலிருந்து, பத்து இலட்சம் பேர் மீண்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பெல்ஜியத்தில் பத்து இலட்சத்து ஆயிரத்து 398பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 28ஆவது நாடாக விளங்கும் பெல்ஜியத்தில் பத்து இலட்சத்து 75ஆயிரத்து 765பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 25ஆயிரத்து 81பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 777பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 49ஆயிரத்து 286பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 285பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.