பிரசார கூட்டத்தில் மீண்டும் டிரம்ப்!

1624841339 trump 2
1624841339 trump 2

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய பிறகு முதல்முறையாக ஒஹையோ மாகாணத்தில் நடைபெற்ற பிரசார பாணிக் கூட்டத்தில் பங்கேற்றாா்.

வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தோ்தலில் மீண்டும் போட்டியிடவிருப்பதாக ஏற்கெனவே அவா் அறிவித்திருந்தாா். இந்த நிலையில், தனக்கான ஆதரவைத் திரட்டும் வகையில் கூட்டத்தில் டிரம்ப் உரையாற்றினாா்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ரக ஏற்கெனவே கூறிய நிரூபிக்கப்படாத தனது கருத்தை மீண்டும் வெளிப்படுத்திய அவா், ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான தற்போதைய ஜனநாயகக் கட்சி அரசு மிகவும் மோசமாக செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டினாா்.